மதுராந்தகம் அருகே பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

மதுராந்தகம் அருகே பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-10 16:32 GMT
பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே சிலாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையில், சில தனிநபர்கள், கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இதனால், சாலையோரம் நிற்கும் பயணியர் மழை, வெயில் காலங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, இதுகுறித்து புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கைவும் எடுக்கப்படவில்லை. எனவே, பயணியர் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News