பந்தப்புளி அருகே கிணற்றில் கிடந்த பெண் சடலம் மீட்பு

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-12 05:55 GMT
பந்தப்புளி அருகே கிணற்றில் கிடந்த பெண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வீரபாண்டி மனைவி சண்முக லட்சுமி வயது 43 கடந்த இரண்டு நாட்கள் முன்பு இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகலட்சுமி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சண்முக லட்சுமி பல இடங்கள் தேடியும் காணவில்லை. இது தொடர்ந்து பந்தப்புளி அருகில் உள்ள தனியார் கிணற்றில் சண்முக லட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News