சாத்தூர் வைப்பாற்றில் தத்தளித்த போதை ஆசாமி மீட்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் தத்தளித்த போதை ஆசாமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர்.

Update: 2024-01-09 07:47 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் தத்தளித்த போதை ஆசாமி பத்திரமாக மீட்பு..*

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வைப்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதனை அடுத்து கடந்த ஒரு சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்தது நேற்று வெம்பக்கோட்டை ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையின் காரணமாக வம்பகோட்டை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இதனை அடுத்து வைப்பாற்றில் நீரோட்டம் அதிகமாக காணப்பட்டது இந்த நிலையில் சாத்தூர் போக்குவரத்து நகர் பகுதியில் வைப்பாற்றின் தண்ணீரில் ஒருவர் தத்தளிப்பது கண்டு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் தண்ணீரில் தத்தளித்த நபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தான் அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. பின்ன நடத்திய விசாரணையில் இவர் சாத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் ராஜா (35) என்பதும் டிரைவர் வேலை செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிய வந்ததை அடுத்து சாத்தூர் நகர் காவல் துறையினர் அவருக்கு புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News