குடியிருப்பு பகுதியில் இருந்து புள்ளி மான் மீட்பு

ஆத்துாரில், குடியிருப்பு பகுதியில் இருந்த புள்ளி மானை, வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2024-01-31 10:46 GMT

குடியிருப்பு பகுதியில் இருந்து புள்ளி மான் மீட்பு

ஆத்துாரில், குடியிருப்பு பகுதியில் இருந்த புள்ளி மானை, வனத்துறையினர் மீட்டனர். ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் பாம்பாட்டி நாயக்கர் தெருவில் உள்ள குடியிருப்பு புதர் பகுதியில், நேற்று காலை, 9:00 மணியளவில் ஒரு வயதுடைய ஆண் புள்ளி மான் இருந்துள்ளது. அந்த மானை, தெரு நாய்கள் சுற்றி வளைத்தன. அப்பகுதி இளைஞர்கள், நாய்களை விரட்டி விட்டு மானை மீட் டனர். ஆத்துார் வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு, கால்நடை மருந்தகத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, கல்வராயன்மலை வனப்பகுதியில் விட்டனர். ஆத்தூர், கல்வராயன்மலை, பைத்தூர் வனப்பகுதியில் புள்ளி மான்கள் அதிகளவில் உள்ளன. மானை கடத்தி வந்த கும்பலிடம் இருந்து, தப்பி வந்ததா? இரை தேடி வந்த மானா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆத்துார் அருகே, நரசிங்கபுரம்,6வது வார்டு, பாம்பாட்டி நாயக்கர் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த, ஆண் புள்ளி மானை, அப்பகுதி இளைஞர்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News