கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-22 06:30 GMT

சடலம் மீட்பு 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பகளவாடி ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி 27 வயதான திவ்யா. இவர் அப்பகுதியில் உள்ள திருப்பதி என்பவர் கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் புலிவலம் காவல் நிலையம் மற்றும் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் சடலமாக கிடந்த இளம்பெண் திவ்யாவை மீட்டு புலிவலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய புலிவலம் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கிணற்றில் சடலமாக கிடந்த திவ்யா கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா வேறு எதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News