அரசு பள்ளியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அரசு பள்ளியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-07-13 11:30 GMT

நெகிழி விழிப்புணர்வு 

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அரசு பள்ளியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்படும் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக உலக காகிதப்பை தினத்தை முன்னிட்டு நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் தீபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெகிழியை தவிர்த்தல் தொடர்பான செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் காகிதப்பை வழங்கப்பட்டது.

மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் குத்தாலம் பகுதியுள்ள தெருக்களில் நெகிழி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளால் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News