அதிமுக சார்பில் நேரில் சென்று அஞ்சலி

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவருக்கு அதிமுக சார்பில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-06-15 07:39 GMT

அஞ்சலி 

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சின்னத்துரையின் உடலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Tags:    

Similar News