மீண்டும் மஞ்சப்பை இயந்திரம் துவக்கம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை இயந்திரத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

Update: 2024-01-19 14:36 GMT

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை இயந்திரத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள 'மீண்டும் மஞ்சப்பை' தானியங்கி இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜராஜேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Tags:    

Similar News