செஞ்சியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்

செஞ்சியில் நடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்ககூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2024-05-10 10:07 GMT

செஞ்சியில் நடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்ககூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் செஞ்சி வட்ட கிளை பேரவை கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சாம்பமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பூங்காவனம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் வக்கீல் ரங்கபூபதி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மாநில தலைவர் கங்காதரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தரணேந்திர தாஸ், ஜெயராமன், நடராசன், லட்சுமிபதி, குமார, செல்வராஜ், கோடீஸ்வரன், சிவநாதன் மற்றும் நிர் வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நியாயமான மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், காலம் தாழ்த்தி அகவிலைப்படி வழங்குவதை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் வட்ட துணை தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News