ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விபத்தில் பலி !

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆட்டோ மோதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலியானார்.

Update: 2024-03-12 06:08 GMT

பலி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காட்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (72). இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர். இவர் நத்தம் அண்ணாநகரில் வசித்து வந்த இவர் திங்கட்கிழமை காலை பால் வாங்க சென்றுள்ளார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற போது நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆறுமுகம் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News