அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்த ஓய்வு பெற்ற விஏஓ

அரூர் அரசுப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிசுத்தொகை வழங்கினார்.

Update: 2024-05-13 14:12 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ,அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தலா 5,000, 4,000, 3,000 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 3000, 2000, 1000 என மொத்தம் ரூ36,000 (முப்பத்து ஆறாயிரம்) மதிப்பிலான பரிசு தொகையை ரத்தினம், வள்ளி ஆகியோர் (விஏஓ ஓய்வு) திருவிக நகரரை சேர்ந்தவர்கள் வழங்கினார்கள். இவர்களுக்கு அரூர் , பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சார்பாக நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News