மயிலாடுதுறையில் வருவாய் வட்ட ஜமாபந்தி தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தி இன்று தொடங்கியது.;
Update: 2024-06-12 16:08 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தி இன்று தொடங்கியது.
வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு வட்டங்களிலும் தொடங்கியது. மயிலாடுதுறை வட்டத்துக்கான ஜமாபந்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது.
இதில் திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூர், மணல்மேடு, கீழாய், கேசிங்கன், ஆத்தூர், பூதங்குடி, நமச்சிவாயபுரம் ஆகிய 6 வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். இதில் வட்டாட்சியர் விஜயராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.