வருவாய் ஆய்வாளர்கள் பணி மாறுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-07-02 06:04 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அலகில் பணிபுரியும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, குறுவட்ட ஆய்வாளர்களாக நாகலுாரில் பணிபுரியும் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கும், சின்னசேலத்தில் பணிபுரிந்த உமாமகேஸ்வரி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கும், நைனார்பாளையத்தில் பணிபுரிந்த செந்தில், மணலுார்பேட்டையில் பணிபுரிந்த ரமேஷ் கலெக்டர் அலுவலகத்திற்கும், வெள்ளிமலையில் பணிபுரிந்த பாலகிருஷ்ணன் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாவட்டம், முழுவதும் மொத்தமாக 32 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News