நோய் தொற்று அபாயம்

கழிவுநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-26 16:02 GMT

கழிவு நீர்

திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், ஸ்டேஷன் ரோடு, அரிசந்திராபுரம் சாலை, தக்கோலம் சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும் 150க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மண்டபங்கள் உள்ளன. இங்கு சேகரமாகும் கழிவுநீர் செல்ல திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கால்வாய் சேதமடைந்து உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி பல மாதங்களாக கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவுநீரில் இருந்து உருவாகும் கொசு, பூச்சிகள் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளை கடிப்பதால், குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர். இந்த பகுதியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை அமைக்கப்படுகிறது.

அப்போது வெளியூர்களில் இருந்து வியாபாரிகள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இவர்களும் நோய் பாதிப்பில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை சீரமைக்கவும், கழிவுநீர் செல்லவும், மக்களை நோய் பாதிப்பில் இருந்து காக்க மாவட்ட நிர்வாகம் கால்வாயை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News