சாலை விபத்தில் சிக்கியவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், பைக், லாரியின் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-01-24 05:37 GMT

சாலை விபத்தில் சிக்கியவர் பலி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் விஸ்வநாதன் 28; பி.எட், பட்டதாரி. இவர்  கள்ளக்குறிச்சியில் உள்ள மொபைல் போன் கடையில் பணிபுரிகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து இந்திலி நோக்கி சென்றார். தச்சூர் தனியார் பள்ளி அருகே சென்ற போது, அதே திசையில் முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், விஸ்வநாதன் ஓட்டி சென்ற பைக் லாரியின் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags:    

Similar News