குற்றாலம் மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

காலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Update: 2023-12-29 11:36 GMT

விழிப்புணா்வு முகாம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கமிட்டி சாா்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) என். நாகேஸ்வரி தலைமை வகித்தாா். சாலைப் பாதுாகப்பு கமிட்டி உறுப்பினா்கள் பேராசிரியா்கள் சாந்திபிரியா, கற்பகசெல்வி, சித்ராதேவி, ஹரிகரலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வைகை ஓட்டுநா் பயிற்சி மைய உரிமையாளா் வைகைகுமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு விதிகள், தலைக் கவசம் அணிவதன் அவசியம், விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பேசினாா். ஒருங்கிணைப்பாளா் தீபா வரவேற்றாா். மாணவி சுடலி நன்றி கூறினாா்.
Tags:    

Similar News