சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

சூணாம்பேடு அருகே சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடக்கிறது.

Update: 2024-04-19 14:22 GMT

சூணாம்பேடு அருகே சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடக்கிறது. 

செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அருகே தொழுப்பேடு முதல் சூணாம்பேடு வரையிலான 18 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஈசூர் - சிறுமயிலுார் கிராமங்களுக்கு இடையேயான 4.5 கி.மீ., சாலை குறுகலாக இருந்ததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது. ஏற்கனவே உள்ள சாலையின் அகலம் 5.5 மீட்டர், தற்போது 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்து, மொத்தம் 7 மீட்டர் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குடியிருப்புப் பகுதிகளில், 760 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News