டிரைவர் வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை

கன்னியாகுமரி அருகே டிரைவர் வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-30 13:28 GMT

கொள்ளை 

கன்னியாகுமரி அருகே பரமார்த்த லிங்கபுரம் அருகே வாசிப்பவர் ராஜேந்திரன் (45). டெம்போ டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்துடன் கோயில் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். நேற்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.      

உள்ளே சென்று பார்த்த போது  மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து ஒரு லட்சம் பணத்தை திருடி சென்றது  தெரிய வந்தது. இது குறித்து ராஜேந்திரன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.      

கன்னியாகுமரி போலீஸ் டிஎஸ்பி மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News