கன்னங்குறிச்சியில் கொள்ளை முயற்சி
கன்னங்குறிச்சியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு நபர் தப்பி ஓட்டம். அந்த நபர்கள் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
Update: 2024-01-30 08:37 GMT
சேலம் கன்னங்குறிச்சி கேசவன்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பியூலா தனபால். இவர் தனது உறவினர் திருமணத்திற்காக திருச்சி சென்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்து 2 பேர் வெளியே ஓடிவந்து காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து காரில் தப்பித்து சென்றனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் மற்றும் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அந்த கார், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியாக நாமக்கல் நோக்கி செல்வதை பார்த்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். நாமக்கல் அருகே காரை நிறுத்திவிட்டு அந்த நபர்கள் தப்பிசென்றனர். காரை போலீசார் மீட்டு கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். அந்த வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பொருட்கள் திருட்டு போகவில்லை என கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த நபர்கள் குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தினர்.