சூப்பர் மார்க்கெட்டில் ரூ.83ஆயிரம் கொள்ளை

கோவில்பட்டியில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.83ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Update: 2024-01-26 10:13 GMT
பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (25). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.85 பணம் திருடுபோயிருந்தது. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அரி கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News