ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தர்மபுரியில் ரோட்டரி சங்கத்தின் 2024 மற்றும் 2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

Update: 2024-07-05 05:15 GMT
தருமபுரி ரோட்டரி சங்கத்தினர் 2024-2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதிவேற்பு விழா தர்மபுரி பிடமனேரி உள்ள தருமபுரி ரோட்டரி அறக்கட்டளை விவேகானந்த காது கேளாதோர் பள்ளியில்நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் தட்சினா மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்,செயலாளர் ரோட்டரியன் சக்திவேல் ஆண்டறிக்கை வாசித்தார். இந்த ஆண்டின் தலைவராக ரோட்டேரியன் மாரியப்பன், செயலாளரராக ரோட்டேரியன் தென்னாசு, பொருளாளராக ரோட்டேரியன் விஜய் அவர்களும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர் தரும்புரி ரோட்டரி அறக்கட்டளை தலைவர் ரோட்டேரியன் DNC மணிவண்ணன்,மாவட்ட துனை முதல் ஆளுநர் சிவராமன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் கண்ணன் மற்றும் தருமபுரி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தினர். இதில் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இறுதியில் ரோட்டரிசெயலாளர் தென்னரசு நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News