ரூ. 2 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு - டிரைவர் கைது

சென்னை பட்டினம்பாக்கத்தில் பங்கு சந்தை வர்த்தகர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-01 04:07 GMT

பைல் படம் 

சென்னை எம் ஆர் சி நகர் சத்திய தேவ் அவன்யூ அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார் இவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சரவணனின் செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்த 27ஆம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான அவரது நடத்தையை சந்தேகித்து, வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடிய போது காணவில்லை இதையடுத்து ஒரு டெக்னீசியனை வர வைத்து லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்த 250 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் ஆகும் இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் டிரைவராக பணியாற்றிய சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் அசோக் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News