போலி கணக்கு உருவாக்கி ரூ.6 கோடி மோசடி - இருவர் கைது

அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் போலி கணக்கு உருவாக்கி ரூ.6 கோடி மோசடி செய்த மேலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-05 07:43 GMT

கைது 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக சாந்தி நகரை சேர்ந்த அப்துல் கபூர், அம்பையை சேர்ந்த மகாராஜா சுப்ரமணியம் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் போலி கணக்கு உருவாக்கி 6 கோடி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி போலீசார் விசாரணை நடத்தி இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News