ரூ. 15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் திறந்த எம்எல்ஏ

கனகப்பபுரத்தில்  ரூ. 15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் எம்எல்ஏ திறந்தார்.

Update: 2024-07-06 07:13 GMT

கன்னியாகுமாரி

கன்னியாகுமாரி அருகே அஞ்சுகிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட கனகப்பபுரத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விடும் அபாய நிலையில் காணப்பட்டது.  குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதியினர்  கன்னியாகுமரி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து பணிகள் நிறைவடைந்தது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெசிம்  உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
Tags:    

Similar News