தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை

வடமதுரை அருகே தென்னம்பட்டியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-02-09 06:00 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் பாலமுருகன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்தக் கடையிலிருந்து குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு வடமதுரை காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Tags:    

Similar News