குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது 27.500 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-26 15:07 GMT

போலி லாட்டரி சீட்டு விற்றவர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

நேற்று பகல் 11:00 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்ற போது, போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள மீன் கடை ஒன்றில் போலி லாட்டரி சீட்டு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. நேரில் சென்ற போலீசார் போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜன், 44, என்பவரை கைது செய்தனர்.

அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரவி, 53, தலைமறைவானார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட நபரிடமிருந்து, நெம்பர்கள் எழுதப்பட்ட ஏழு துண்டு சீட்டுக்கள் மற்றும் ரொக்கம் 27 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News