கஞ்சா விற்பனை - நான்கு நபர்கள் கைது !
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
Update: 2024-04-27 08:56 GMT
விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் பாண்டியன் இவர் கடந்த 26 ஆம் தேதி காலை சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குல்லூர்சந்தை வீரப்ப வித்யாலயா பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சோலைராஜ் சஞ்சய் ஆதி வேல்பாண்டி ஆகிய நான்கு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் விற்பனைக்காக உலர் கஞ்சா இருப்பது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்த சூலக்கரை காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்து ரொக்கப் பணம் 29 ஆயிரத்து 900 ரூபாயையும் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.