குட்கா விற்பனை : மார்த்தாண்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

மார்த்தாண்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-28 03:22 GMT

அதிகாரிகள் சோதனை 

குமரி மாவட்டத்தில் ஏராளமான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகி றது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் மற்றும் உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், குழித் துறை நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ், மார்த்தாண்டம் உணவு பாதுகாப்பு அதிகாரி கிளாட்சன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டாக மார்த்தாண்டம் மெயின் ரோடு மற்றும் மார்க் கெட் பகுதிகளில் உள்ள 17 கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு சோதனை செய்தும் எந்த கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News