வெள்ளியணை டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை

வெள்ளியணை டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-05 16:12 GMT

வெள்ளியணை டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் நான்காம் தேதி மாலை 5 மணி அளவில், வெள்ளியணை தெற்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பள்ளாநத்தம் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் வயது 36 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News