எடப்பாடி மருத்துவமனையில் நேபாள பெண்ணிற்கு எலும்பு முறிவு சிகிச்சை

எடப்பாடி அரசு மருத்துவமனையில் வெளிநாட்டைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணிற்கு தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.

Update: 2024-03-12 12:25 GMT

நேபாளத்தை சேர்ந்த பெண்ணிற்கு எலும்பு முறிவு சிகிச்சை

எடப்பாடி அரசு மருத்துவமனையில் வெளிநாடு நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்து வருவதால் அருகில் உள்ள மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

குறிப்பாக பல்வேறு எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆர்த்தோ மருத்துவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் வெளிநாட்டை சேர்ந்த தீபா (25) என்ற் பெண் இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் சென்னையில் உள்ள உறவினரின் மூலம் நேபாளத்தில்  உள்ள பெண்மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தொடர்ந்து தலைமை மருத்துவர் கோகுல கிருஷ்ணன் பரிந்துரையில் ஆர்த்தோ மருத்துவர் பாலாஜி வெளிநாட்டு பெண் தீபாவுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தோள்பட்டியில் ஏற்பட்ட நரம்பு பாதிப்பு சம்பந்தமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News