சேலம் சிறையில் குறைதீர்க்கும் முகாம்:20 கைதிகள் விடுதலை !
சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் 24 கைதிகள் கலந்து கொண்டனர். இதில் 21 கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
Update: 2024-03-28 06:54 GMT
சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் 24 கைதிகள் கலந்து கொண்டனர். இதில் 21 கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆத்தூர் கிளைச்சிறையில் உள்ள 5 கைதிகள் முகாமில் கலந்து கொண்டனர். இதில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் தர்மபுரி, ஓமலூர் சிறைகளில் தலா 1 ஒரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி சேலம் மத்திய சிறை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சிறை கைதிகளுக்கு நடத்தப்பட்ட குறைதீர்க்கும் முகாமில் 31 பேர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 20 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தகவலை சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் தெரிவித்து உள்ளார்.