சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது

Update: 2024-05-24 01:16 GMT

சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது


சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயார் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்வான வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று காலை 5.45 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து தேர் மண்டபத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி எழுந்தருளி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்க உள்ளனர்.

Tags:    

Similar News