இருசக்கர வாகனம் திருடிய நபரை கையும், களவுமாக பிடித்த பொதுமக்கள்

டயர் கடை முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

Update: 2024-02-18 17:40 GMT

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் டயர் கடை முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை சங்ககிரி போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள குண்டிருசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடேசன் மகன் சக்திவேல். இவர் சங்ககிரி அருகே அய்யங்காட்டூர் பகுதியில் உள்ள தனியார் டயர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ௭ம் தேதி கடைக்கு வெளியே நிறுத்தியிருந்த அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் வேறு ஒரு இரு சக்கர வாகனத்தை திருட முயன்றவரை அப்பகுதியில் பொதுமக்கள் பொதுமக்கள் பிடித்து சங்ககிரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் பிடிப்படவர் தஞ்சாவூர் மாவட்டம்  கிழக்கு நாடியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) என்பதும், சக்திவேலின் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News