நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டை முன்னிட்டு நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 டிசம்பர் 31ஆம் தேதி ஒரே நாளில் ரூபாய் 2 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது.

Update: 2024-01-04 01:50 GMT

பைல் படம் 

நாகை ,மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மது அருந்துவோர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைளை  அதிக அளவில் வாங்கிச் சென்றனர். இந்த வகையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மது வகைகள் ரூ 2 கோடியே 29 லட்சத்து 53390 க்கும், பீர் ரூபாய் 20 லட்சத்து 21 ஆயிரத்து 660 க்கும் என ஒரே நாளில் ரூபாய் 2கோடியே 49 லட்சத்தி 75 ஆயிரத்து 50க்கு டாஸ்மார்க் கடையில் விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு விட ரூ30 லட்சத்து 54,000 அதிகமாகும். கடந்த 2022 டிசம்பர் 31-ம் தேதி ரூ2 கோடியே 19 லட்சத்து 21 ஆயிரத்து 50க்கு  விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News