சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் புதிய அறங்காவலர் குழு தலைவர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக வி எஸ் பி இளங்கோவன் 4 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Update: 2024-03-16 17:43 GMT

புதிய அறங்காவலர் 

திருச்சி மாவட்டம், மாரியம்மன் கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அறங்காவலரும் மற்றும் அறங்காவலர் குழு தலைவரும் நியமிக்க படாமல் இருந்தது. இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் அறங்காவலர் குழுவிற்கு நான்கு பேரை இந்து சமய அறநிலைத்துறை நியமனம் செய்தது அந்த அறங்காவலர்கள் நான்கு பேரும் அறங்காவலர் குழு தலைவருக்காக போட்டியிட்டனர்.

அறங்காவலர் குழு தலைவராக வி .எஸ். பி இளங்கோவன் 4 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் .. இந்த அறங்காவலர் குழு தேர்வில் வி. எஸ். பி இளங்கோவன், ராஜசுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர்.இதில் வி. எஸ் .பி இளங்கோவன் நான்கு வாக்குகள் பெற்று அறங்காவலர் குழு தலைவராக வெற்றி பெற்று பதவி ஏற்றார்.

இந்த அறங்காவலர் குழு தேர்தலை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையில் சரக ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .வெற்றி பெற்ற அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன் மற்றும் அறங்காவலர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் கோயில்பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

Similar News