மணல் கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

ஒடுகத்தூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-05-22 12:17 GMT

ஒடுகத்தூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் உத்திர காவேரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் விஜியகுமார் உள்ளிட்ட போலீசார் தோளப்பள்ளி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒடுகத்தூர் உத்திர காவேரி ஆற்றில் இருந்து இரட்டை மாட்டு வண்டியில் ஒருவர் விற்பனைக்காக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அப்போது போலீசாரை கண்டத்தும் மாட்டு வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு இளைஞர் ஒருவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை பின்னால் துரத்தி சென்று அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பது தெரியவந்தது. பின்னர் அந்த மாட்டு வண்டியை போலீசார் சோதனை செய்த போது விற்பனைக்காக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தும், மணல் கடத்திய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News