சீவலப்பேரி அருகே போலீசார் சோதனையில் சிக்கிய மணல் லாரி

சீவலப்பேரி அருகே போலீசார் சோதனையில் மணல் லாரி சிக்கியது.

Update: 2024-01-22 09:40 GMT

காவல் நிலையம் 

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பூலுடையார் சாஸ்தா கோவில் அருகே போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்த போது போலீஸாரை கண்டதும் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.

போலீசார் அந்த லாரியை சோதனையிட்டதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவர் கணேஷ் மூர்த்தி(40) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News