வனப்பகுதியில் சந்தன மரம் கடத்தியவர் கைது !

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ஆரியங்காவு வனப்பகுதியில் சந்தன மரம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-03 04:30 GMT

கைது 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ஆரியங்காவு வனப்பகுதியில், கடந்த 20ஆம் தேதி அங்கிருந்த கண்காணிப்பு கேமரா உடைத்து சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது. இதுகுறித்து வனத்துறை மற்றும் தென்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் புளியரை பகவதிபுரம் ராஜி நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற 'தோபி கண்ணன்' என்பவர் தனது கூட்டாளிகளுடன் மரத்தை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்ணனை இது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News