இராசிபுரம் அருகே சந்து காளியம்மன் பண்டிகை !

Update: 2024-05-07 04:40 GMT

இராசிபுரம் அருகே உள்ள இரா.புதுப்பாளையம் கிராமத்தில் கருப்புசாமி கோயில் தெருவில் சந்து காளியம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை தொடங்கிய விழாவில் சாமிக்கு கண் திறப்பும் பின்னர் பூஜை செய்யப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து சக்தி அழைப்பும் கரகம் எடுத்தலும் நடைபெற்றது. இவ்வளம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஒட்டச்சாயி அம்மன் கோவிலுக்கு சென்று பின் சந்து காளியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னர் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. மாலை பெரியோர், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவுற்றது.

Tags:    

Similar News