ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.;
Update: 2024-05-27 06:23 GMT
சங்கடஹர சதுர்த்தி
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.