சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் மாவட்டம், ஆனந்தாபேட்டையில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

Update: 2024-06-29 07:54 GMT

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆனந்தா பேட்டை சந்து பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக சாலை முழுதும் ஆறுபோல வழிந்தோடிய கழிவுநீர், திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலை வரை சென்றது. இதனால், அவ்வழியாக சென்றவர்கள் கழிவுநீரில் செல்லும் அவல நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், ஆனந்தாபேட்டையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News