பைக் மீது ஆம்னி வேன் மோதி விபத்து கூலித்தொழிலாளி பலி

பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது நடந்த விபத்தால் சோகம்

Update: 2024-02-18 17:45 GMT

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி

சேலம் மாவட்டம் சங்ககிரியை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சமப்வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் மித்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சரவணன் (40). ஈரோடு பகுதியில் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சங்ககிரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது,   பின்னால் வந்த ஆம்னி வேன் எதிர்பாரதவிதமாக சரவணன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறைத்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News