சங்கரன்கோவிலில் தாக்கப்பட்ட பெயின்டா் உயிரிழப்பு

தாக்கப்பட்ட பெயின்டா் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Update: 2024-07-04 08:28 GMT
சங்கரன்கோவிலில் தாக்கப்பட்ட பெயின்டா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 8 ஆம் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் கருப்பசாமி(35). பெயின்டா் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி லட்சுமி வீட்டில் ஆடுகள் வளா்த்து வந்தாராம். அந்த ஆடுகளை அதே பகுதியில் வசிக்கும் பண்டாரம் மகன் சரவணன் (42) என்பவரது வளா்ப்பு நாய் கடந்த 20 நாள்களுக்கு முன்பு கடித்துவிட்டதாம். இதுகுறித்து சரவணனிடம் தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறின்போது, கம்பியால் கருப்பசாமி தாக்கப்பட்டாராம். இதில், பலத்த காயமுற்ற அவா், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், ஏற்கெனவே அடிதடி வழக்குப்பதிவு செய்திருந்த சங்கரன்கோவில் நகர போலீஸாா், கொலை வழக்காக மாற்றினா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய சரவணன் அவரது மனைவி கேசம்மாள், அதே பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல், பாலமுருகன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News