சங்கரன்கோவில் : 3 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்

சங்கரன்கோவில் அருகே காவல்துறையை கண்டித்து 3 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-10 03:49 GMT
அடைக்கப்பட்ட கடைகள் 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து 9 கிராம மக்கள் முற்றுகையிட அனுமதி கோரிக்கை மனு காவல் நிலையத்தில் வழங்கினர் இதையடுத்து காவல்துறையினர் மறுக்கப்பட்டதால், சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சாலை மறியல் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் காவல்துறையை கண்டிக்கின்ற வகையில் 3 கிராமங்களில் கடைகளை அடைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
Tags:    

Similar News