இளம்பெண்ணிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய சரத்குமார்

தேர்தல் பரப்புரையில் இளம்பெண்ணிற்கு அளித்த வாக்குறுதியை சரத்குமார் நிறைவேற்றினார்.

Update: 2024-05-19 14:20 GMT

தேர்தல் பரப்புரையில் இளம்பெண்ணிற்கு அளித்த வாக்குறுதியை சரத்குமார் நிறைவேற்றினார்.


விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அவரது கணவர் சரத்குமார் பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அல்லம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராதிகா மற்றும் சரத்குமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் நந்தீஸ்வரி என்பவர் தனது திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் திருமணத்தில் இருவரும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது திருமணத்திற்கு வருவதாக உறுதியளித்திருந்த சரத்குமார் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விருதுநகரில் இன்று நடைபெற்ற இளம்பெண் நந்தீஸ்வரியின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News