நெல்லிக்குப்பம் பள்ளியில் ஆண்டு விழா

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-10 07:19 GMT

பள்ளி ஆண்டு விழா 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று மாலை 2023-2024ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கவிதை, கட்டுரை போட்டிகள், நாடகம், உள்ளிட்ட நடனப் போட்டிகளும், 2022-2023ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லிக்குப்பம் இஐடி பாரி இந்தியாலிட். சர்க்கரை ஆலையின் துணைத் தலைவர் பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் கொடுத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியை க. பூங்கொடி தலைமை வகித்தார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ. ராமலிங்கம் மற்றும் SMC தலைவி ராதிகா முன்னிலை வகித்தனர். பள்ளியின் து. தலைவர் கண்மணி வரவேற்புரை ஏற்றார். ஆசிரியை சாந்தி தொகுத்து வழங்கினார். மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து மாணவிகளும் பங்கேற்று ஆர்ப்பரித்தனர்.

Tags:    

Similar News