சைக்கிள் மீது பள்ளி வேன் மோதல் - தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே சைக்கிள் மீது பள்ளி வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு.போலீசார் வழக்கு பதிவு.

Update: 2024-02-14 06:11 GMT

சைக்கிள் மீது பள்ளி வேன் மோதல் - தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் பகுதியை சேர்ந்தவர் வேத ராஜாமணி (58). இவர் தேங்காய் வெட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று மாலையில் வேதராஜாமணி பஞ்சலிங்கபுரத்திலிருந்து நரிகுளம் மேம்பாலம் வழியாக கன்னியாகுமரியில் நோக்கி தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் மேம்பால திருப்பில் திரும்பிய போது, அஞ்சு கிராமத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வேதராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் இது பற்றி கன்னியாகுமரி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி போலீசார் மவேத ராஜாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகன ஓட்டுனர் அருண் C38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News