வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பொதுத்தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது

தர்மபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பொதுத்தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-28 11:34 GMT

வேட்புமனு பரிசீலனை

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையானது தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா,  முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப. தலைமையில் இன்று (28.03.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல் அலுவலர்கள், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) தஅ. அசோக்குமார், வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News