சுத்தமல்லியில் நிவாரண பொருட்கள் வழங்கிய எஸ்டிபிஐ

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-12-22 09:06 GMT

நிவாரண பொருட்கள் வழங்கல் 

எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி பகுதி சார்பாக சுத்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமல்லி பகுதி தலைவர் பயாஸ் தலைமையில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கே.எம்.எ நகர் தலைவர் ரசீது,மதினா,நகர் செயலாளர் அபு,ஆறாவது வார்டு தலைவர் ரபீக் மற்றும் ஆரிப் உள்ளிட்ட கட்சி கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News