திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை குறை தீர்வு முகாம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை நியாயவிலை கடைகளில் மக்கள் குறைதீர்வு முகாம் நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-02-07 09:54 GMT


திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை நியாயவிலை கடைகளில் மக்கள் குறைதீர்வு முகாம் நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை நியாயவிலை கடையில் மக்கள் குறைதீர்வு முகாம் நடத்த ஆட்சியர் உத்தரவு! திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் பிப்ரவரி மாதம் 10.02.2024 அன்று கீழ்கண்ட கிராமங்களில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட பொதுமக்கள் குறைதீர் முகாம் பின்வரும் விவரப்படி குறிப்பிட்ட கிராமங்களில் 10.02.2024 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. திருப்பத்தூர் நாட்றம்பள்ளி வாணியம்பாடி பெரியகரம் மல்லங்குப்பம் ஈச்சங்கால் ஆம்பூர் தென்னம்பட்டு உள்ளிட்ட கிராமகளில் நியாய விலைக்கடையிள் குறைதீர் முகாம் நடைபெறும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல். நியாயவிலை கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்ற கோரிக்கைகளை நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்து குறைகளை தீர்வு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News